கர்பலா - வரலாறு புரண்ட கதை
நபிகளாரின் பேரன் ஹுஸைன் இப்னு அலி (ரழி) எதன் பொருட்டு உமைய்யப் பேரரசை பகைத்துக் கொண்டார்? எதன் பொருட்டு தன்னுடைய குடும்பத்தினரையும் உயிராபத்துக்கள் கொண்ட பணியில் ஈடுபட வைத்தார்? உண்மையில் தன்னால் உமைய்யா பேரரசை வீழ்த்த முடியும் என்று நினைத்திருப்பாரா? தனிமனிதர்களை விட சமூக மாற்றத்தின் இயங்கியல் பிரமாண்டமானது என்று நபிகளாரின் பேரரும், கூர்மதி படைத்த நபித் தோழருமான ஹுஸைன் (ரழி) அறியாமல் இருந்திருப்பார் என்று கருத முடியுமா?
நபிகளாரின் மறைவுக்கு பிறகு இஸ்லாத்தின் சமூக திட்டத்தை நேர்வழி நடந்த கலீபாக்கள் மிகவும் ஈடுபாட்டுடன் கொண்டு சென்றனர். ஆனால் மூன்றாவது கலீபாவான உஸ்மான் இப்னு அப்பான் (ரழி) அவர்களின் இறுதித் தறுவாய்களில் இந்த சமூகத் திட்டத்திற்கான முனைப்புகள் மங்கத் தொடங்கி அலி இப்னு அபூதாலிப் (ரழி) இன் காலத்தில் கிலாபா ஆட்சி முஆவியாவின் தலைமையில் டமஸ்கஸிலும், அலியின் தலைமையில் கூபாவிலுமாக இரண்டாக உடைந்தது. பிற்பாடு நபிகளாரின் மூத்த பேரன் ஹஸன் (ரழி) அவர்கள் தன்னுடைய கிலாபா பதவியை முஆவியாவுக்கு விட்டுக் கொடுத்ததன் மூலம் மீண்டும் கிலாபா ஓரே தலைமையின் கீழ் ஒருங்கிணைந்தது.
நபிகளாரின் பேரன் ஹுஸைன் இப்னு அலி (ரழி) எதன் பொருட்டு உமைய்யப் பேரரசை பகைத்துக் கொண்டார்? எதன் பொருட்டு தன்னுடைய குடும்பத்தினரையும் உயிராபத்துக்கள் கொண்ட பணியில் ஈடுபட வைத்தார்? உண்மையில் தன்னால் உமைய்யா பேரரசை வீழ்த்த முடியும் என்று நினைத்திருப்பாரா? தனிமனிதர்களை விட சமூக மாற்றத்தின் இயங்கியல் பிரமாண்டமானது என்று நபிகளாரின் பேரரும், கூர்மதி படைத்த நபித் தோழருமான ஹுஸைன் (ரழி) அறியாமல் இருந்திருப்பார் என்று கருத முடியுமா?
நபிகளாரின் மறைவுக்கு பிறகு இஸ்லாத்தின் சமூக திட்டத்தை நேர்வழி நடந்த கலீபாக்கள் மிகவும் ஈடுபாட்டுடன் கொண்டு சென்றனர். ஆனால் மூன்றாவது கலீபாவான உஸ்மான் இப்னு அப்பான் (ரழி) அவர்களின் இறுதித் தறுவாய்களில் இந்த சமூகத் திட்டத்திற்கான முனைப்புகள் மங்கத் தொடங்கி அலி இப்னு அபூதாலிப் (ரழி) இன் காலத்தில் கிலாபா ஆட்சி முஆவியாவின் தலைமையில் டமஸ்கஸிலும், அலியின் தலைமையில் கூபாவிலுமாக இரண்டாக உடைந்தது. பிற்பாடு நபிகளாரின் மூத்த பேரன் ஹஸன் (ரழி) அவர்கள் தன்னுடைய கிலாபா பதவியை முஆவியாவுக்கு விட்டுக் கொடுத்ததன் மூலம் மீண்டும் கிலாபா ஓரே தலைமையின் கீழ் ஒருங்கிணைந்தது.
ஆனால் முஆவியா தனக்கு பிறகு ஷுரா எனப்படும் ஆலோசனை மன்றத்தின் மூலமே அடுத்த ஆட்சியாளரை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ஹஸன் இப்னு அலி இட்டிருந்தார். ஆனால் முஆவியா இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படவில்லை. தன்னுடைய மகன் யஸீதை தனக்குப் பிறகான ஆட்சியாளர் ஆக்கும் எண்ணத்துடன் செயல்பட்ட முஆவியா அதனை பலப்பிரயோகத்தின் அடிப்படையில் சாதித்துக் கொண்டார். நபிகளாரின் போதனைகளும் புனித அல் குர்ஆனும் வலியுறுத்தல் செய்த ஷுரா எனப்படும் ஆலோசனை முறைமை செயலிழந்து போனது. இடைப்பட்ட காலத்தில் ஹஸன் (ரழி) அவர்களும் மறைந்தார். சில வலுவற்ற அறிவுப்புகளின் படி ஹஸன் (ரழி) நஞ்சூட்டப்பட்டே மரணித்தார்.
மெளலானா மெளதூதி கூறுவது போல ஹுஸைன் (ரழி) நேர்வழி நடந்த கலீபாக்களின் நடைமுறையில் இருந்து யஸீதின் தலைமைத்துவ தெரிவு விலகி நின்றதே அவர் உமைய்யா பேரரசை எதிர்த்தமைக்கான காரணம். ஷுரா எனப்படும் ஆலோசனை முறைமை புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட நுணுக்கமான கட்டமைப்பு மாற்றத்தை ஹுஸைன் (ரழி) திறம்பட முன்னுணர்ந்து கொண்டார். இந்த மாற்றம் ஓர் வக்கிரமான மாற்றம் என்பதையும் முஸ்லிம் சமூகத்தினை அது மீளவே முடியாத சகதிக்குள் தள்ளி விடும் என்பதையும் தன்னுடைய பிரமிக்கத்தக்க அறிவாற்றலுடன் ஹுஸைன் தீர்க்கதரிதனத்துடன் கணித்தார்.
மெளலானா மெளதூதி கூறுவது போல ஹுஸைன் (ரழி) நேர்வழி நடந்த கலீபாக்களின் நடைமுறையில் இருந்து யஸீதின் தலைமைத்துவ தெரிவு விலகி நின்றதே அவர் உமைய்யா பேரரசை எதிர்த்தமைக்கான காரணம். ஷுரா எனப்படும் ஆலோசனை முறைமை புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட நுணுக்கமான கட்டமைப்பு மாற்றத்தை ஹுஸைன் (ரழி) திறம்பட முன்னுணர்ந்து கொண்டார். இந்த மாற்றம் ஓர் வக்கிரமான மாற்றம் என்பதையும் முஸ்லிம் சமூகத்தினை அது மீளவே முடியாத சகதிக்குள் தள்ளி விடும் என்பதையும் தன்னுடைய பிரமிக்கத்தக்க அறிவாற்றலுடன் ஹுஸைன் தீர்க்கதரிதனத்துடன் கணித்தார்.
இதுவே ஹுஸைன் (ரழி) இனை போராட்டக் களத்தை நோக்கி உந்தியது. தன்னுடைய மகத்துவம் பொருந்திய பாட்டனாரை அனைத்து வகையிலும் நேசித்து பின்துயர்ந்த உன்னதமான பேரன் அவர். உலக வரலாற்றில் யாருக்குமே கிடைத்திராத பாட்டனாரான இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூக திட்டங்கள் செயலிழந்து போவதை நேர்வழியின் துவஜமான ஹுஸைன் (ரழி) விரும்புவாரா? இஸ்லாத்தின் மீதான ஹுஸைன் (ரழி) யின் ஆழமான பற்றுறுதியை உலகம் நிதர்சனமாக கண்டு கொண்ட இடமே, கர்பலா.
ஹுஸைன் (ரழி) இக்கு யஸீதினை ஆயுதப் போராட்டம் மூலம் எதிர் கொள்ளும் திட்டங்கள் ஏதும் இருந்ததா? நிச்சயமாக இருக்கவில்லை. உமைய்யா பேரரசுக்கு எதிரான மக்கள் அபிப்பிராயங்களை திரட்டுவதன் மூலமான சாத்வீகமான ஆட்சி மாற்றத்தையே ஹுஸைன் (ரழி) நாடினார். இது இறுதியில் - அக்கால நடைமுறைகளைப் பொறுத்து - ஆயுதப் போராட்டத்துக்கே இட்டுச் சென்றிருக்கும் என்பது வேறு விடயம். ஆனாலும் ஆயுத மோதலை இயன்ற அளவில் தவிர்க்கவே நபிகளாரின் பேரன் விரும்பினார். மக்கள் ஏற்பை தன்னுடைய போராட்டத்தின் பக்கம் திருப்பும் பொருட்டு அவர் அக்கால முஸ்லிம் சாம்ராஜ்ய முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்தார். கூபாவில் இருந்து அவருக்கு சாதகமான சமிக்ஞை வந்தது. ஆனாலும் ஏனைய நபித் தோழர்கள் கூபா வாசிகளின் உறுதியின்மையை அறிந்து அந்த அழைப்புக்கு செவிமடுக்க வேண்டாம் என்றே ஹுஸைனுக்கு அறிவுறுத்தல் செய்தனர்.
ஹுஸைன் (ரழி) இக்கு யஸீதினை ஆயுதப் போராட்டம் மூலம் எதிர் கொள்ளும் திட்டங்கள் ஏதும் இருந்ததா? நிச்சயமாக இருக்கவில்லை. உமைய்யா பேரரசுக்கு எதிரான மக்கள் அபிப்பிராயங்களை திரட்டுவதன் மூலமான சாத்வீகமான ஆட்சி மாற்றத்தையே ஹுஸைன் (ரழி) நாடினார். இது இறுதியில் - அக்கால நடைமுறைகளைப் பொறுத்து - ஆயுதப் போராட்டத்துக்கே இட்டுச் சென்றிருக்கும் என்பது வேறு விடயம். ஆனாலும் ஆயுத மோதலை இயன்ற அளவில் தவிர்க்கவே நபிகளாரின் பேரன் விரும்பினார். மக்கள் ஏற்பை தன்னுடைய போராட்டத்தின் பக்கம் திருப்பும் பொருட்டு அவர் அக்கால முஸ்லிம் சாம்ராஜ்ய முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்தார். கூபாவில் இருந்து அவருக்கு சாதகமான சமிக்ஞை வந்தது. ஆனாலும் ஏனைய நபித் தோழர்கள் கூபா வாசிகளின் உறுதியின்மையை அறிந்து அந்த அழைப்புக்கு செவிமடுக்க வேண்டாம் என்றே ஹுஸைனுக்கு அறிவுறுத்தல் செய்தனர்.
ஆனாலும் ஹுஸைன் அந்த நபித் தோழர்களின் கருத்துக்களை புறக்கணித்து தன்னுடைய மனசாட்சியின் குரலுக்கு அடிபணிந்தார். தன்னுடைய உள்ளுணர்வு காட்டிய தடத்தில் பயணம் செய்தார். துரதிர்ஷ்டவசமாக நபித் தோழர்களின் தீர்க்கதரிசனம் பலித்தது. கூபா வாசிகள் தங்களுடைய வாக்கில் உண்மையாளர்களாக நடந்து கொள்ளவில்லை. ஹுஸைன் (ரழி) தன்னுடைய குடும்பத்தினருடன் தனித்து விடப்பட்டார். யஸீதின் படைகள் ஈராக்கின் கர்பலாவில் ஹுஸைன் (ரழி) எனப்படும் சாத்வீக அரசியல் போராளியை ஆயுத முனையில் எதிர் கொண்டன. தன்னுடைய செயல்களில் மட்டுமின்றி தன்னுடைய தோற்றத்தில் கூட தனது பாட்டனாரான நபிகளாரை ஒத்திருந்த ஹுஸைன் (ரழி) நீசத்தனமாக படுகொலை செய்யப்பட்டார்.
கர்பலா கொலைக் களத்தில் ஹுஸைன் (ரழி) குடும்பத்தில் எஞ்சியது பெண்களும், மிகவும் இள வயதினராக இருந்த, பிற்காலத்தில் அறிவியல் தராதரத்தில் உயர்ந்து, ஆத்மீக வாழ்விலும் திளைத்திருந்த "ஸஜ்ஜாத்" ஆன அழைக்கப்பட்ட அலி ஸைனுல் ஆப்தீன் எனப்படும் ஓரே ஒரு ஆண் மகவும் தான். கர்பலாவில் ஹுஸைனுக்காக அழுத கண்கள் இன்னும் வற்றவவில்லை. ரழியல்லாஹு அன்ஹு.
கர்பலா எனப்படும் வரலாறு புரண்ட கதை நிகழ்ந்து ஆயிரத்து முன்னூறு வருடங்கள் கழித்தும் அதனை நினைவு கூர்வதன் தேவை தான் என்ன? மாண்புகள் பல பொருந்திய ஒரு குடும்பத்தின் கண்ணியம் மிக்க ஒரு புதல்வன் அநியாயம் இழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு காவிய சோகம் மட்டுமா? அல்லது நிகழ்கால அரசியல் நலன்கள் அடிப்படையில் வரலாற்றை வியாக்கியானம் செய்வதன் தேவையா? இவற்றில் எது? இரண்டுமா அல்லது இரண்டுமே அல்லாத வேறு காரணங்களா?
நபிகளாரின் காலத்தில் இருந்தே மிகவும் அடிப்படையான ஒரு விழுமியமாக கருதப்பட்டு வந்த ஷுரா எனப்படும் ஆலோசனை முறைமை கை விடப்பட்ட தருணத்தில் தான் ஹுஸைன் (ரழி) களத்தில் நுழைந்தார். ஆன்மீக வீழ்ச்சி என்பதை மதிப்பீடுகளின் வீழ்ச்சி என்று மிகச் சிறப்பாகவே கணிப்பிட்டு இருந்த ஹுஸைன் (ரழி) யின் விழுமியவாத பார்வையையே நாமும் கைக் கொள்ள வேண்டி இருக்கிறோம். இஸ்லாத்தின் உன்னதமான இலக்குகளை காப்பாற்ற வேண்டி எத்தகைய அதிகாரங்களையும் எதிர்த்து உண்மைகளை பேசிட வேண்டும் என்பதும் கர்பலா தரும் இன்னொரு பாடம். தூய நோக்கம் மட்டுமின்றி இலக்கை அடைவதற்கான தெளிவான செயல்வாதத்தின் தேவையையும் கர்பலாவில் நாம் கற்றுக் கொள்ளலாம்.
ஹுஸைனுக்காக அழுத கண்கள் இன்னும் வற்றவவில்லை. பேரொளிப் பிழம்பாக ஹுஸைனின் ஆளுமையை நாமும் சுவீகரித்துக் கொள்வோம் என்று இன்ஷா அல்லாஹ்.
கர்பலா எனப்படும் வரலாறு புரண்ட கதை நிகழ்ந்து ஆயிரத்து முன்னூறு வருடங்கள் கழித்தும் அதனை நினைவு கூர்வதன் தேவை தான் என்ன? மாண்புகள் பல பொருந்திய ஒரு குடும்பத்தின் கண்ணியம் மிக்க ஒரு புதல்வன் அநியாயம் இழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு காவிய சோகம் மட்டுமா? அல்லது நிகழ்கால அரசியல் நலன்கள் அடிப்படையில் வரலாற்றை வியாக்கியானம் செய்வதன் தேவையா? இவற்றில் எது? இரண்டுமா அல்லது இரண்டுமே அல்லாத வேறு காரணங்களா?
நபிகளாரின் காலத்தில் இருந்தே மிகவும் அடிப்படையான ஒரு விழுமியமாக கருதப்பட்டு வந்த ஷுரா எனப்படும் ஆலோசனை முறைமை கை விடப்பட்ட தருணத்தில் தான் ஹுஸைன் (ரழி) களத்தில் நுழைந்தார். ஆன்மீக வீழ்ச்சி என்பதை மதிப்பீடுகளின் வீழ்ச்சி என்று மிகச் சிறப்பாகவே கணிப்பிட்டு இருந்த ஹுஸைன் (ரழி) யின் விழுமியவாத பார்வையையே நாமும் கைக் கொள்ள வேண்டி இருக்கிறோம். இஸ்லாத்தின் உன்னதமான இலக்குகளை காப்பாற்ற வேண்டி எத்தகைய அதிகாரங்களையும் எதிர்த்து உண்மைகளை பேசிட வேண்டும் என்பதும் கர்பலா தரும் இன்னொரு பாடம். தூய நோக்கம் மட்டுமின்றி இலக்கை அடைவதற்கான தெளிவான செயல்வாதத்தின் தேவையையும் கர்பலாவில் நாம் கற்றுக் கொள்ளலாம்.
ஹுஸைனுக்காக அழுத கண்கள் இன்னும் வற்றவவில்லை. பேரொளிப் பிழம்பாக ஹுஸைனின் ஆளுமையை நாமும் சுவீகரித்துக் கொள்வோம் என்று இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment