உரை: உஸ்தாத் காலித் மிஷ்அல்
பொதுத் தலைப்பு:
அரபு வசந்த பின்னணியில் இஸ்லாமிய இயக்கங்களில் ஏற்பட்டு வரும் நிலைமாற்றங்கள் குறித்த அல்ஜஸீராவின் கருத்தரங்கு.
(அரபு வசந்தம் வெற்றிகரமாக முன் செல்வதற்கான சுபசோபனங்கள் கருத்தரங்கில் உரையாற்றியோர் மூலமாக பல கோணங்களிலும் முன்வைக்கப்பட்டன. எதேச்சாதிகாரத்தின் பிடியிலிருந்து அரபு வசந்தம் மீண்டு வரும்; அரபு வசந்தத்தில் ஒவ்வொரு அரசாக வீழ்ந்து கொண்டிருக்க, இங்கு விரைவாகவோ காலம் கணிந்தோ பலஸ்தீன் விடுவிக்கப்பட வேண்டும் என இஸ்லாமிய உம்மத் விரும்புகிறது. அது முஹம்மத்(ஸல்) அவர்கள் இஸ்ரா மேற்கொண்ட மகோன்னத பூமி. ஈஸா(அலை) பிறந்த பூமி. முதல் கிப்லா, மூன்றாவது புனிதஸ்தலம். இன்று அது அரபுலகிலும் இஸ்லாமிய உலகிலும் தீர்க்கப்பட வேண்டிய மையப் பிரச்சினை அது; முதன்மை விவகாரம் அது. அது ஒவ்வொரு இஸ்லாமிய மற்றும் உலகளவிலும் தாக்கம் செலுத்திகொண்டிருக்கிறது.
இப்புரட்சி என்பது நாட்கள், வாரங்கள், மாதங்களில் வெற்றிபெறக் கூடியது அல்ல; அத்தோடு இருக்கும் அரசுகளின் தலைகள் வீழ்வதோடு மாத்திரம் முடிந்துவிடுவதுமல்ல. இந்த அரபு வசந்தம் பிராந்திய, சர்வதேச ரீதியில் ஒன்றோடு ஒன்று தொடர்பான நலன்களுக்குள் சிக்கிய ஆழ்ந்த தேசங்களுடன் தொடர்புடையது இது. இங்கு எதிர்ப்புரட்சிகள் மாற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருந்தோரிடம் கஷ்டத்தை, நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அதற்காக உழைப்போர் தமது நாடுகளில், பிராந்தியங்களில், சர்வதேசத்தில் தமக்கு வாய்க்கப்பெற்ற பலம், சாதனங்களின் துணை கொண்டு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இங்கு இந்த புரட்சி அரசியல் ரீதியாக, சிந்தனா ரீதியாக, கருத்தியல் ரீதியாக பலஸ்தீன போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பேசப்படுகிறது. இதில் ஹமாஸ் போராட்டத்தின் மையமாக இருந்தது. பலஸ்தீன போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது மட்டுமே அரபு வசந்தத்தில் தோன்றிய எதிர்ப் புரட்சிகளின் நோக்காக இருந்தது எனலாம். அரபு வசந்தம் பலஸ்தீன போராட்டத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன? ஹமாஸில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன? கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? போராட்டத்தின் மூலோபாயம், கஷ்ட-நஷ்டங்கள், பிழை விட்ட இடங்கள் என சிந்தனைகளில் ஏற்படுத்திக் கொண்ட மீளாய்வுகள், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வழிகள் என்ன? அனைத்தும் இங்கு முன்வைக்கப்படுகிறது. முன்வைப்பவர் அறிமுகங்கள் ஏதும் அவசியமற்றவர்; ‘ஹமாஸ்’ இயக்கத்தின் அரசியல் பிரிவுத் பொறுப்பாளர் உஸ்தாத் காலித் மிஷ்அல் அவர்கள். அவரது உரையின் தமிழ் தழுவலாக ஓரளவு சுருக்கப்பட்டு இங்கு முன்வைக்கப்படுகிறது. வல்ல அல்லாஹ் நமது பணிகளைப் பொருந்திக் கொள்வானாக!)
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே… ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ஸல்) மற்றும நபிமார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
கூடியிருக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் முதற்கண் நன்றிகள். நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் தலைப்பு இஸ்லாமிய வாதிகள் மற்றவர்கள் என பலரும் கரிசனை காட்டக் கூடிய தலைப்பு.
இந்த இடத்துக்கு பேச அழைக்கப்பட்ட கணம், பெரும் சவால் மிகுந்த விடயமொன்றை எவ்வாறு பேசப்போகிறேன் என்ற கேள்வியுடன் இருந்தேன். எனது உரை எதிர்வரும் நாட்கள் குறித்து உங்களை திருப்திப்படுத்தவும் சுபசோபானங்களை முன்வைக்கவும் வேண்டும். உங்களது அறிவுகளைக் கண்ணியப்படுத்தவும் உம்மத்தை ஏமாற்றாமலும் உங்களுடைய விவகாரத்தில் உங்களது இயங்குதலில் எவ்வித பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும். அதோடு நீங்கள் இஸ்லாமிய நாடுகளோடும் இஸ்லாமியப் பரப்பில் உழைத்துக் கொண்டிருப்போருடனும் முரண்படுவதாக உங்களைக் காணவும் கூடாது.
எனவே அல்லாஹ் மீது தவக்குல் வைத்தவனாக நான் இவற்றை முன்வைத்து பேச விரும்புகிறேன். சரியானவற்றை சுருக்கமாகத் தர முயற்சிக்கிறேன்.
அரபு வசந்த பின்னணியில் இஸ்லாமிய இயக்கங்களிடத்தில் ஏற்பட்டு வந்த நிலைமாற்றங்கள்:
அரபு வசந்தத்தின் பின்ணணியில் நின்று இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமிய வாதிகளிடத்தில் ஏற்பட்டு வந்த நிலைமாற்றங்கள் குறித்து நோக்குவோமாயின், நாம் பலஸ்தீனிலே போராடிக் கொண்டிருக்கும் அமைப்பு. நாம் மட்டும் தான் ஒரே ஒரு அமைப்பல்ல. பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டத்தில் நாம் ஒரு முன்னுதாரணம். எமது முழு முதல் நோக்கம் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி நமது பூமியை மீட்டெடுப்பதுதான். ஆனால் ஹமாஸுக்கென்று ஒரு இஸ்லாமிய அரசியல் பக்கம் இருக்கின்றது.
ஒரு கட்டத்தில் நமக்கு அதிகாரப் பொறுப்பு வழங்கப்பட்டு நமது மக்களைப் போஷிப்பதற்கும், பாதுகாக்கவும், சீரமைக்கவும், நமது மக்களுக்குப் பணி செய்யவும் வாய்ப்பை நாம் தேர்ந்தெடுத்தோம். அப்போது நமது எதிர்ப்புப் போராட்டத்தை பாதுகாக்க அதனை நாம் வடிவமைத்தோம்.
இப்பின்னணியில் நான் இரு தலைப்புக்களில் பேசுவேன்.
(அரபு வசந்தம் வெற்றிகரமாக முன் செல்வதற்கான சுபசோபனங்கள் கருத்தரங்கில் உரையாற்றியோர் மூலமாக பல கோணங்களிலும் முன்வைக்கப்பட்டன. எதேச்சாதிகாரத்தின் பிடியிலிருந்து அரபு வசந்தம் மீண்டு வரும்; அரபு வசந்தத்தில் ஒவ்வொரு அரசாக வீழ்ந்து கொண்டிருக்க, இங்கு விரைவாகவோ காலம் கணிந்தோ பலஸ்தீன் விடுவிக்கப்பட வேண்டும் என இஸ்லாமிய உம்மத் விரும்புகிறது. அது முஹம்மத்(ஸல்) அவர்கள் இஸ்ரா மேற்கொண்ட மகோன்னத பூமி. ஈஸா(அலை) பிறந்த பூமி. முதல் கிப்லா, மூன்றாவது புனிதஸ்தலம். இன்று அது அரபுலகிலும் இஸ்லாமிய உலகிலும் தீர்க்கப்பட வேண்டிய மையப் பிரச்சினை அது; முதன்மை விவகாரம் அது. அது ஒவ்வொரு இஸ்லாமிய மற்றும் உலகளவிலும் தாக்கம் செலுத்திகொண்டிருக்கிறது.
இப்புரட்சி என்பது நாட்கள், வாரங்கள், மாதங்களில் வெற்றிபெறக் கூடியது அல்ல; அத்தோடு இருக்கும் அரசுகளின் தலைகள் வீழ்வதோடு மாத்திரம் முடிந்துவிடுவதுமல்ல. இந்த அரபு வசந்தம் பிராந்திய, சர்வதேச ரீதியில் ஒன்றோடு ஒன்று தொடர்பான நலன்களுக்குள் சிக்கிய ஆழ்ந்த தேசங்களுடன் தொடர்புடையது இது. இங்கு எதிர்ப்புரட்சிகள் மாற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருந்தோரிடம் கஷ்டத்தை, நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அதற்காக உழைப்போர் தமது நாடுகளில், பிராந்தியங்களில், சர்வதேசத்தில் தமக்கு வாய்க்கப்பெற்ற பலம், சாதனங்களின் துணை கொண்டு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இங்கு இந்த புரட்சி அரசியல் ரீதியாக, சிந்தனா ரீதியாக, கருத்தியல் ரீதியாக பலஸ்தீன போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பேசப்படுகிறது. இதில் ஹமாஸ் போராட்டத்தின் மையமாக இருந்தது. பலஸ்தீன போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது மட்டுமே அரபு வசந்தத்தில் தோன்றிய எதிர்ப் புரட்சிகளின் நோக்காக இருந்தது எனலாம். அரபு வசந்தம் பலஸ்தீன போராட்டத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன? ஹமாஸில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன? கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? போராட்டத்தின் மூலோபாயம், கஷ்ட-நஷ்டங்கள், பிழை விட்ட இடங்கள் என சிந்தனைகளில் ஏற்படுத்திக் கொண்ட மீளாய்வுகள், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வழிகள் என்ன? அனைத்தும் இங்கு முன்வைக்கப்படுகிறது. முன்வைப்பவர் அறிமுகங்கள் ஏதும் அவசியமற்றவர்; ‘ஹமாஸ்’ இயக்கத்தின் அரசியல் பிரிவுத் பொறுப்பாளர் உஸ்தாத் காலித் மிஷ்அல் அவர்கள். அவரது உரையின் தமிழ் தழுவலாக ஓரளவு சுருக்கப்பட்டு இங்கு முன்வைக்கப்படுகிறது. வல்ல அல்லாஹ் நமது பணிகளைப் பொருந்திக் கொள்வானாக!)
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே… ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ஸல்) மற்றும நபிமார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
கூடியிருக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் முதற்கண் நன்றிகள். நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் தலைப்பு இஸ்லாமிய வாதிகள் மற்றவர்கள் என பலரும் கரிசனை காட்டக் கூடிய தலைப்பு.
இந்த இடத்துக்கு பேச அழைக்கப்பட்ட கணம், பெரும் சவால் மிகுந்த விடயமொன்றை எவ்வாறு பேசப்போகிறேன் என்ற கேள்வியுடன் இருந்தேன். எனது உரை எதிர்வரும் நாட்கள் குறித்து உங்களை திருப்திப்படுத்தவும் சுபசோபானங்களை முன்வைக்கவும் வேண்டும். உங்களது அறிவுகளைக் கண்ணியப்படுத்தவும் உம்மத்தை ஏமாற்றாமலும் உங்களுடைய விவகாரத்தில் உங்களது இயங்குதலில் எவ்வித பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும். அதோடு நீங்கள் இஸ்லாமிய நாடுகளோடும் இஸ்லாமியப் பரப்பில் உழைத்துக் கொண்டிருப்போருடனும் முரண்படுவதாக உங்களைக் காணவும் கூடாது.
எனவே அல்லாஹ் மீது தவக்குல் வைத்தவனாக நான் இவற்றை முன்வைத்து பேச விரும்புகிறேன். சரியானவற்றை சுருக்கமாகத் தர முயற்சிக்கிறேன்.
அரபு வசந்த பின்னணியில் இஸ்லாமிய இயக்கங்களிடத்தில் ஏற்பட்டு வந்த நிலைமாற்றங்கள்:
அரபு வசந்தத்தின் பின்ணணியில் நின்று இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமிய வாதிகளிடத்தில் ஏற்பட்டு வந்த நிலைமாற்றங்கள் குறித்து நோக்குவோமாயின், நாம் பலஸ்தீனிலே போராடிக் கொண்டிருக்கும் அமைப்பு. நாம் மட்டும் தான் ஒரே ஒரு அமைப்பல்ல. பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டத்தில் நாம் ஒரு முன்னுதாரணம். எமது முழு முதல் நோக்கம் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி நமது பூமியை மீட்டெடுப்பதுதான். ஆனால் ஹமாஸுக்கென்று ஒரு இஸ்லாமிய அரசியல் பக்கம் இருக்கின்றது.
ஒரு கட்டத்தில் நமக்கு அதிகாரப் பொறுப்பு வழங்கப்பட்டு நமது மக்களைப் போஷிப்பதற்கும், பாதுகாக்கவும், சீரமைக்கவும், நமது மக்களுக்குப் பணி செய்யவும் வாய்ப்பை நாம் தேர்ந்தெடுத்தோம். அப்போது நமது எதிர்ப்புப் போராட்டத்தை பாதுகாக்க அதனை நாம் வடிவமைத்தோம்.
இப்பின்னணியில் நான் இரு தலைப்புக்களில் பேசுவேன்.
ஒன்று, ஹமாஸ் எவ்வாறு அரபு வசந்தத்தை கையாண்டது என்பதும் பின் அது எதிர்ப் புரட்சிகளை எவ்வாறு கையாண்டது என்பதுமாகும். அதில் ஹமாஸ் செலுத்திய தாக்கம், ஹமாஸ் அடைந்த தாக்கம் என்பனவும் பேசப்படும்.
இரண்டாவது, அரபு வசந்தத்தில் இஸ்லாமியவாதிகளின் பாத்திரம் எவ்வாறிருந்தது என்பது குறித்த பார்வையையும் ஹமாஸ் பாலஸ்தீன மக்களின் விடயத்தில் அதனை எவ்வாறு கையாண்டது என்பதும் பேசப்படும்.
முதலாவது பகுதியைப் பொருத்தமட்டில்,
(1) அரபு வசந்த்தத்தின் தாக்கம் குறித்து நோக்கினால், எவ்வித தயக்கமுமின்றி நாம் தாக்கமடைந்தோம் எனக் கூறுவோம். யாரும் அதனால் தாக்கமுறவில்லை; ஒரு போதும் அரபு வசந்தத்தில் நாம் தாக்கம் அடையவில்லை; தாக்கம் செலுத்தவில்லை என்றெல்லாம் கூற முடியாது; கூறவும் மாட்டோம். அந்த புரட்சியில் பெரும் பெரும் அரசுகள் நாடுகள் எல்லாம் நிலை குலைந்து தடுமாறி நின்ற வேலை ஓர் இயக்கம் தாக்கம் அடையவில்லை என எவ்வாறு கூறுவது? அவ்வாறே ஹமாஸ் அதன் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியிலும் வித்தியாசமான விளைவுகளைக் கண்டது.
(2) 2006ல் நாம் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றோம். அதுவே சிலவேளை அரபு வசந்தத்துக்கு முன்னரே நாம் வைத்த எட்டுக்களாக இருந்திருக்கலாம். அதே நேரம் அதுவே எதிர்ப் புரட்சியொன்று தேவை என்பதை எதிரிகளுக்கு உணர்த்திய சிறு முன்னுதாரணமாகவும் அது இருந்திருக்க முடியும்.
(3) அடுத்து பலஸ்தீன மக்களும் அவர்களது போராட்டமும் ஹமாஸோ அல்லது பலஸ்தீன மக்களோ கூறாவிட்டாலும் நிச்சயமாக பிராந்தியத்தின் அரபு வசந்தத்தில் ஆழ்ந்த தாக்கத்தை நிகழ்த்தியது. இதனை நான் அரபுத் தலைநகரங்களுக்கு சென்ற போது அவதானித்தேன். இவ்விடயத்தில் நாம் பாலஸ்தீனிலே உள்ள அனைத்து போராடுபவர்களையும் நினைவுபடுத்துகிறேன். பாலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் என்பது ஹமாஸை விட மிகப் பெரிய ஒரு வட்டம். ஹமாஸ் அவர்களிலே முன்னணியில் உள்ள முக்கிய ஓர் அடையாளம்.
பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் இந்த உம்மத்துக்கு இரு வகைகளில் முன்னுதாரணத்தை வழங்குகின்றது. ஒன்று, ஆயுத எதிர்ப்பு ரீதியான முன்னுதாரணம். அடுத்தது மற்றது மக்கள் திரளின் முன்னுதாரணம். பலஸ்தீன குழந்தை நெஞ்சு நிமிர்த்தி யுத்தத் தாங்கிகளுக்கு முன்னால் நிற்கும் தைரியத்தை என்னவென்பது! இவை உம்மத்தினது கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட விடயம். இங்கே பெரும் அற்புத சக்தியொன்று இருக்கின்றது.
(4) அடுத்து நாம் அவதானிக்க வேண்டும். நாம் அரபுப் புரட்சிகளால் சாதகமாகவும் பாதகமாகவும் தாக்கமுற்றோம் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நாம் பிராந்தியத்தில் இருக்கிறோம்; அரபு-இஸ்லாமிய, பிராந்திய, சர்வதேச ரீதியான விவகாரங்களில் நாம் தாக்கத்துக்கு உட்படுவோம் என்பது இயல்பானது. பொதுவாக எல்லா மக்களிடத்தேயும், பலஸ்தீன மக்களிடத்தில் குறிப்பாகவும் எதிர்ப்புணர்வு சிறப்பாக என்பது இருந்துகொண்டிருக்கிறது. அவ்வகையில் இந்த புரட்சி என்பது தன்னிலையானது. ஆக்கிரமிப்பைக் கடுமையாக எதிர்ப்பதுடன் தொடர்புடையது. நம்முடைய இந்த எதிர்ப்புப் போராட்டமானது பருவத்துக்குப் பருவம் கூடிக் குறைவதல்ல. நம்மை சூழவும் சிறப்பான சுழற்சிகள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் பாதக சுழற்சிகள் நிகழ்ந்தாலும் நமது எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். சர்வதேச ரீதியான எவ்வகை மாற்றம் நிகழ்ந்த போதிலும் நாம் எமது போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருப்ப்போம்
பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டமானது உத்வேகம் பெற்ற 1950கள் மற்றும் 60களில் கடினமான ஒரு கட்டத்திலே ஃபத்ஹ் உட்பட பல பலஸ்தீனிய இயக்கங்கள் எதிர்ப்ப்புப் போராட்டத்தை முன்கொண்டு சென்றன. பின்பு முதலாவது இன்திபாழா மக்கள் மயப்பட்டதாக வெடித்தது. 2000ம் ஆண்டில் இரண்டாம் இன்திபாழா, 2வது கேம்டேவிட் உடன்படிக்கையுடன் பலஸ்தீன் உள்ளும் புறமுமாக ஆக்கிரமிப்பினால் கிளர்ந்தெழுந்த மக்கள் மூலமாக வெடித்தது. ஒஸ்லோ உடன்படிக்கையோடு பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் முடிந்துவிடும் என எதிர்பார்த்தோருக்கு இது ஏமாற்றமளித்தது.
அதன் பின்பு தொடர்ந்த மூன்று போர்கள் காஸா பள்ளத்தாக்கின் மீது தொடுக்கப்பட்டது. அவை ஒவ்வொன்றுமே வெவ்வேறான காலப் பகுதிகளில் சிறந்த சூழலோ அல்லது பாதகமான சூழலோ எதிலும் நாம் போராடத் திறன்பெற்றவர்கள் என்ற செய்தியை உலகுக்கு சொன்னது.
2008/09 முதல் போர் தொடுக்கப்பட்ட போது நாம் எவ்வித உதவியும் இல்லாமலே எல்லாப் புறமும் எதிர்ப்புகளாக இருந்த காலப்பகுதியில் கடினத்துடன் எதிர்கொண்டோம்.
பின்பு 2012இல் இரண்டாவது யுத்தம் தொடுக்கப்பட்ட போது அரபு வசந்தம் அதன் ஆரம்பகட்ட சுபசோபனங்களுடன் நம்மருகே இருந்தது. எகிப்து நமக்கு முழுமையான ஆதரவை வழங்கியது.
அடுத்ததாக 2014 யுத்தம் வந்தது. அரபு வசந்தத்தின் எதிர்ப் புரட்சிகள் நிகழ்ந்த சூழல் அது. அப்போது பலரும் ‘ஹமாஸ் அதன் பழைய தோழமைகளை இழந்துவிட்டது; அது புதிய தோழமைகளை அடைந்துகொள்ளவில்லை’ என்றெல்லாம் சொன்னார்கள். ஆனாலும் நாம் எமது போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தோம்.
இவை, அரசியல்-ஆயுத ரீதிகளாக ஆதரித்துப் பலப்படுத்துவதற்கு நம்மை சூழ ஆதரவாளர்கள் இருந்தபோதிலும் இல்லாத சூழ்நிலைகளிலும் பலஸ்தீன மக்கள் சாத்தியமற்றவைகளையும் சாதிக்கக் கூடியவர்கள் என்பதைக் காட்டுகிறது.
அரபு வசந்தத்தை பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் எவ்வாறு கையாண்டது?
மிக இலகுவாக விளங்கக் கூடிய அமைப்பில் அரபு வசந்தம் நம்மை அடைந்தது. அது பல படித்தரங்களை கடந்து சென்றது. துருக்கியும் கத்தரும் நெருக்கமாக நின்று செயலாற்றின. அப்போது பல நடுநிலை நாடுகள் நம்மை ஆதரித்தன.
இதன் போது நாம் மாத்திரம் நின்று செயலாற்றவில்லை. நமது நட்புகளான பல தரப்பினரும் சந்தேகமின்றி நம்மைப் பலப்படுத்தினர். நாம் நடுநிலை அரபு நாடுகள் அனைத்துக்கும் நமது கதவுகளைத் திறந்து வைத்தோம். நாமும் பல வாயிற்படிகளுக்கு ஏறி, இறங்கினோம். சிலர் நமக்கு தம்முடைய வாயில்களைத் திறந்து கொடுத்தனர்; இன்னும் சிலர் கதவை மூடிக் கொண்டுவிட்டனர்; இன்னும் சிலரோ தயக்கத்துடன் நின்றனர்.
நாம் பலஸ்தீன பிரச்சினையை நம்முடைய பிரச்சினையாக மட்டுமல்லாமல். இந்த உம்மத்தின் பிரச்சினையாகப் விசுவாசிக்கிறோம். அதனை நமது அரபு நாடுகளுக்கிடையில் துண்டுகளாக்கி பிரித்து நோக்குபவர்களாக இருக்கவில்லை. பலஸ்தீன பிரச்சினை குறித்த இந்த உம்மத்தின் ஆர்வத்தினை நாம் அரபுத் தலைநகரங்களுக்கு சென்ற போது நன்கு அவதானித்தோம். நாம் அனைவருடனும் வேலை செய்ய விரும்புகிறோம். இவ்வாறு நாம் இக்காலப் பகுதியில் மக்களின் சிந்திப்பில் பாதிப்பு செலுத்தினோம்.
குறுகிய கால வெற்றிகளுடன் அரபு வசந்தம் வந்த போது பல மக்கள் தரப்புக்களும் திகைத்து நின்றன. பலஸ்தீன மக்களும் விரைவான மாற்றமொன்றை எதிர்பார்த்தனர். ஏனெனில் பலஸ்தீனர் ஆக்கிரமிப்பை விட்டும் சுதந்திரக் காற்றை விரைவிலேயே சுவாசிக்க விரும்புகின்றனர். அதற்கு இஸ்லாமிய உம்மத் உதவும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உள்ளது.
சில நாடுகள் அரபு வசந்தத்தை தயக்கத்தோடு நோக்கின. அரபு வசந்தம் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், சீர்திருத்தங்களை கலக்கத்துடன் நோக்கின. ஏனெனில் அரசுகளும் அதிகார மையங்களும் வாரிசு ரீதியான ஆட்சிக் கைமாறல்களுக்கு முற்றுப்புள்ளி இடப்படும் என்ற அச்சம் இருக்கையில் சீர்திருத்தங்கள், மாற்றங்களை ஏற்பது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.
2011 அரபு வசந்தத்துடன் நிறைய புதிய காட்சிகள் தோன்றின. எதிர்பார்ப்புகள், சுபசோபனங்களுடன் நாம் அவற்றைப் பார்த்தோம். பல அமைப்புக்கள், தலைமைகள் நீதி, ஜனநாயக அடையாளங்களுடன் வந்தன. நாமும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்தோம். நாம் சுபமாகவே அவற்றை நோக்கியதுடன் அரசியல் ரீதியில் பயனடைந்தோம். நமது எதிர்ப்புப் போராட்டத்துக்கு பலத்த ஆதரவைப் பெற்றோம்.
எகிப்து, துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் மூலம் சிறந்த தலைமை வழங்கப்பட்டது. 2012 போரின் போது அரபு லீக் செயலாளர் வருகை தந்தார்; எகிப்து பிரதமர் காஸாவுக்கு வருகை தந்தார். எகிப்து அரபுலகின் மிகப் பெரும் நாடு; துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் வருகை தந்தார்.
அப்போது எல்லோரும் கேட்டது என்னவெனில் பலஸ்தீன எதிர்ப்பு போராளிகள் இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு என்ன நிபந்தனைகளை இடுகின்றனர் என்பதைத் தான்… அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த இஸ்ரேலை காப்பாற்றுவதற்கென அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளின்டன் கூட வந்துசென்றார். அவர்கள் மீதுதான் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது; நம்மீது அல்ல; இதுவொரு பெரிய மாற்றம்.
அப்போது இலக்குகளை அடைந்துகொள்வதில் அந்த குறுகிய கால போர், பெரு வெற்றிபெற்றது. முழு அரபு-இஸ்லாமிய சமூகங்களும் ஒன்றிணைந்து நிற்கும் போது பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் எந்த வடிவம் பெற்று இருக்கும் என்பதற்கான சிறு உதாரணமாக அது காணப்பட்டது.
அதன்போது நமது எதிர்ப்பு நாடுகளில் இருக்கும் நம் நண்பர்கள் சிலரையும் நாம் அணுகிப் பார்த்தோம். அதாவது, அரபுலகில் நிகழ்ந்த மாற்றங்களை அந்த இடங்களில் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அவர்களை நமது புறத்திலிருந்து ஆவலுடனும் நம்பிக்கையுடனும் அணுகினோம்.
அங்கும் மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் இருந்தன. அதுபற்றி அங்கிருந்த சில புரட்சிகர ஆளுமைகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினோம். இதுவெல்லாம் வரலாற்றில் நினைவுபடுத்தப்படப்போகும் விடயங்கள். அவ்வாறு அங்கு மாற்றத்துக்கான விசை சரியான, அறிவுபூர்வமான முறையில் கொடுக்கப்பட்டிருந்தால் அங்குள்ள மக்களும் அந்த மாற்றங்களை ஏற்றிருப்பார்கள்.
இவற்றுடன், இச்சந்தர்ப்பங்களில் நாம் நடுநிலை நாடுகளுடனும் நமது வாயில்களைத் திறந்து வைத்திருந்தோம். நாம் அவர்களின் உதவி தேவையற்றது போன்று பெரிய எண்ணம் வைக்காது புதிய புதிய வாயில்களை அங்கு திறந்தோம்; அவர்களும் பல புதிய வாயில்களைத் திறந்தனர்.
அங்கும் கலந்துரையாடல்களை நிகழ்த்தினோம். அந்த நாடுகளில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கும் நடைமுறையை சரியாக விளங்கி, கணித்து செயல்பட அறிவுறுத்தினோம். இஸ்லாமிய உம்மத்துக்கு பெரும் அறிவுறுத்தல்களை வழங்கினோம்.
அரபு வசந்தத்தின் நற்செய்திகள் வந்து கொண்டிருந்த இந்தக் காலப் பிரிவில், நாம் எம்மை நுணுக்கமாக வரையறை செய்தோம். அவை நமது இஜ்திஹாத். அதன் முக்கிய நான்கு அம்சங்கள்:
(1) நாம் பலஸ்தீன விடுதலைப் போராட்ட இயக்கம். பலஸ்தீனை அதனை ஆக்கிரமித்திருப்போரிடம் இருந்து மீட்கப் போராடுகிறோம்.
(2) பலஸ்தீன விவகாரத்தை, குத்ஸ் விடயத்தை இஸ்லாமிய உம்மத்தின் முதன்மைப் பிரச்சினையாக உம்மத்திடம் முன்வைத்து அதனைப் பேணுதல். இதனை அயலகப் பிரச்சினைகளுக்குள் உள்நுழைக்காதிருத்தல்.
(3)அடுத்து பிராந்தியத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்குள் உள்நுழையாமல் இருக்கும் அதே நேரம் அவ்விடயம் குறித்த பொறுப்பான, பண்பான நிலைப்பாடொன்றை அடிப்படையில் கொண்டிருப்போம். மக்களுடன் அவர்களது உரிமைக்காக இருப்போம்; அவர்களது வேதனைகளை அறிந்தவர்களாக இருப்போம். உம்மத்தின் ஒற்றுமையில், நலன்களில் கவனத்துடன் இருப்போம்.
இவை இயல்பானவை; இவை ஹமாஸினதும் பலஸ்தீன மக்களினதும் நிலைப்பபாடுகள்; ஹமாஸ் ஒரு மக்கள் இயக்கம்; அது மக்களது எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும்; நாம் ஒரு நீதியான விவகாரத்துக்காகப் போராடுகின்றவர்கள். நாம் அநியாயத்துடன் கைகோர்க்கக் கூடாது. சிலர் இதன் போது மக்களுக்கு எதிராக இருக்கும் படி கோரிய போது நாம் மறுத்தோம்.
(4) அடுத்து பிராந்தியத்தின் நாடுகள் மற்றும் சக்திகளோடு அரசியல் ராஜதந்திர உறவுகளைப் பேணும் போது, நமது நலன்கள் மற்றும் அத்தியாவசியங்களுக்கிடையே சமநிலை பேண முயற்சிப்போம். அதன் போது நலன்களுடன் நமது அடிப்படைகள் முரண்படும் போது நமது அடிப்படை பண்பாட்டுப் பெறுமானங்கள் மீதே திரும்புவோம். சிலர் தமது மக்களுக்கெதிராக நம்மை நிற்குமாறு கோரிய பொழுதில் நாம் நமது நிலைப்பாட்டை எடுத்து, இவற்றுக்கான விலைகளை கடந்த காலங்களில் செலுத்தியுமிருக்கிறோம். அவை குறித்து கடந்த காலங்களில் ஆழமான வாதங்கள் பல எழுந்தும் உள்ளன.
எதிர்ப் புரட்சி காலப் பகுதிகள்:
அரபு வசந்தம் குறித்த பகுதிக்குப் பின்னால் நாம் எதிர்ப் புரட்சிகள் இடம்பெற்ற காலப் பிரிவுகளுக்குள் நுழைவோம். பெரும் மாற்றங்கள் குவிந்த காலப் பகுதியாக இது அமைந்தது. நாடுகள் பெரும் கலேபரமுற்றன. ஜனநாயகம் குப்புறக் கவிழ்க்கப்பட்டது. இதன் போது அரபு வசந்தத்துடன் தொடர்புறாத சில பிராந்திய நாடுகளின் ஜனநாயகத்தை வீழ்த்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மக்களை இன்னும் கஷ்டத்திலே வீழ்த்தும் முன்னெடுப்புக்கள் இவை.
இது நிகழ்ந்த காலப் பிரிவுகளில் நாம் எம்மை மிகுந்த அபாயத்துக்குள் சிக்கியிருப்பதை கண்டுகொண்டோம். பிராந்தியத்தின் அரசியல் ஸ்திரமின்மையானது கொலை, கொள்ளை, இடப்பெயர்வு என இரத்தம் தோய்க்கப்பட்டிருந்தது. ஒரு வகை குழுவாதம் மேலோங்க செய்யப்பட்டிருந்தது. இந்த குழுவாதத்தின் அடியாக சண்டைகளும் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. அது உண்மையில் மக்கள் சார்ந்த குழுவாதங்கள் அல்ல. மக்கள் இதன் போது தம் பாட்டிலேயே இருந்தனர். இந்த குழுவாதங்களைத் தோற்றுவித்தது சில அரசுகள், ததத்தமது நலன்களை நாடிய சில சக்திகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களுமாகும். அந்தக் குழுக்களுக்கு அரசியல் பிரக்ஞ்சைகளுமில்லை; இஸ்லாம் குறித்த சரியான புரிதலும் இல்லை.
இக்காலப் பகுதிகளில் முன்னர் எப்போதும் இல்லாதவாறு சில தீவிரவாதக் குழுக்கள் வெளிப்பட்டு வந்ததை நாம் கண்டோம். இஸ்லாத்தில் ஆழ்ந்த அறிவு பெறாத அத்தகையவர்களுக்குப் பின்புலமாக கடும்போக்கும் அறியாமையும் இருந்தது; இஸ்லாத்துக்கும் அரபுக்களுக்கும் தீய பெயரை உருவாக்கும் பாதகமான முயற்சிகளையே அவர்கள் கொண்டிருந்தனர். இவர்களால் ஜனநாயகத்தின் மூலம் ஏற்பட்டு வந்த மக்களுக்கான மாற்றங்களையும் அவர்கள் ஒழிப்பவர்களாக இருந்தனர். இவர்கள் பல்வேறு பிரிவினரின் அஜண்டாக்களுக்குள் சிக்கியிருந்ததுடன் பிராந்தியத்தின் முதன்மைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் சீர்குலைவுகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இதன் பின்னரான காலப் பகுதியில் பல வெளிச் சக்திகள் பிராந்தியத்துக்குள் நுழைவதை நாம் நேரடியாகக் கண்டோம். அவ்வேளை மக்களை துண்டு துண்டாகப் பிரித்து விடும் திட்டங்கள் பரவலாக அரங்கேற்றப்பட்டன. மக்கள் இவ்வகைக் குழுப் போர்களுக்குள் மூழ்கியிருக்கையில் இஸ்ரேலுக்கு சாதகமான நிலைகள் பல கோணங்களில் மீண்டும் தோன்றின. எதிரியாகக் கையாளப்படவேண்டிய நெடடன்யாஹு அரபு நாடுகளுடன் தமக்கிருக்கும் நேரடி, மறைமுகத் தொடர்புகள் குறித்து பெருமைப்பட்டுக் கூறிக் கொண்டிருந்தார்.
அப்போது நாம் தெளிவாகக் கூறினோம், உம்மத் பல பிரச்சினைகளுக்குள் சிக்கி நிற்கும் போது இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுவது புத்திசாதுரியமானதல்ல. அப்போது பலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் அபாயம் ஒன்றும் குறைந்திருக்கவும் இல்லை; மாறாக அரபு வசந்தத்துக்கே எதிராக இஸ்ரேலின் அபாய நகர்வுகள் அதிகரித்துவிட்டிருந்தன; உம்மத்துக்கு எதிராக அது செயற்பட்டுக் கொண்டிருந்தது. இந்த உம்மத் அதன் சுதந்திரத்தைப் பெறுவதில் தாமதிக்க செய்வதில் இஸ்ரேலுக்கு மிகப் பெரும் பங்கிருக்கின்றது. இதே வேலையை அரபு அரசுகளும் தம்முடைய மக்களது நாட்டங்களைப் புதைக்க முற்படும்போது செய்துகொண்டிருக்கின்றன; அவைஅரசியலையும் ராஜதந்திரத்தையும் குறுக்கி நோக்குகின்றன; ஒருவருக்கொருவர் இஸ்ரேலுக்கு பணிவிடை செய்யும் நிலையே இருந்தது. நிலைமைகள் இவ்வாறு இஸ்ரேலுக்கு ஆதரவாக முழுமையாக மாற்றப்பட்டன. பலஸ்தீன் ஒரு கட்டுக்குள் முடக்கப்படப் பார்த்தது.
இந்த சந்தர்ப்பங்களை ஹமாஸ் கையாண்டது எவ்வாறு?
நிலைமைகளைக் கையாள்வதில் குழப்பம் நிலவிய போதிலும், முன்னர் தொடர்ந்தேர்ச்சியாகப் பெற்று வந்த வெற்றிகள் போலவே அடுத்து வரப்போகும் கட்டங்களிலும் ஹமாஸ் வெற்றிபெறுவது குறித்த கேள்வி எழும்பியது. ஆம்… ஹமாஸ் வெற்றிபெறும் என்பதை சொல்லிவைக்கிறோம். அப்போது நாம் கைக்கொண்ட சில முறைமைகளை இவ்வாறு கூறலாம்:
(1) நாம் எம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தினோம். எதிர்ப்புக்களை எதிர்கொள்வதில், சாதிப்பதில் நமது இயலுமை எவ்வாறு உள்ளது; எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை நாம் மீள்பரிசீலனை செய்தோம். மிகக் கடினமான காலங்களில் நாம் எவ்வாறு செயற்படுவோம்; அவற்றை எவ்வாறு முகங்கோடுப்போம் என்பதையும் மீள்பரிசீலித்தோம். எவரும் உதவி வழங்க முடியாத கடந்த ‘அல்அஸ்ஃப் அல்மஃகூல்’ யுத்த நடவடிக்கையின் போது நாம் பன்மடங்கான ஆயுத பலத்தினைப் பெற்றிருந்தோம். பலஸ்தீனம் சாத்தியமற்றவற்றையும் கூட சாதித்துக் காட்டும் பலம்கொண்டது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
(2) அடுத்து பாலஸ்தீன ஒருமைப்பாட்டைப் பேணுவதில் இகாலப் பகுதியில் ஹமாஸ் கூடிய கவனம் செலுத்தியது. இதன்போது ஹமாஸும் இஸ்லாமியவாதிகளும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் ஜனநாயகம் பேணப்பட ஹமாஸ் பல விட்டுக் கொடுப்புக்களை செய்தது. நமது அரசியல்துறைப் பிரதிப் பொறுப்பாளர் இஸ்மாயில் ஹனிய்யா பிரதமர் பொறுப்பை விட்டும் முன்னாள் பிரதமராக மாறினார். இதன்போது தேர்தலில் நம்மை மிகைக்க சில திட்டங்கள் வகுக்கப்பட்டு நம்மை ஆலோசிக்காமலே தேர்தல் நேரம் குறிக்கப்பட்டது. பின்னர் நாம் தேர்தலில் பங்கேற்கும் தீர்மானத்தை எடுத்ததும் தேர்தலைப் பிற்போட்டனர்.
(3) நாம் குறித்த நிகழ்வுகளால் பாதக விளைவுகளை அனுபவித்த போதிலும், அவற்றின் மூலம் அதிகபட்சம் படிப்பினைகளைப் பெற முயற்சித்தோம். ஏனெனில் சில பாதக விளைவுகள் நம்மிடமிருந்தே உருவாகியிருந்தன. அவற்றிலிருந்து கற்றுக் கொள்வது நமது கடமையாகும்.
(4) நான்காவதாக நாம் பிராந்தியத்தின் ஏனைய முறுகல்களுக்குள் நுழையாமல் இருக்கும் அரசியலைத் தொடர்ந்து பேணினோம். அத்தோடு தோற்றுவிக்கப்பட்டிருந்த குழுவாதங்களை இழிவளவாக்குவதற்கு தொடர்ந்தும் முயன்றுகொண்டே இருந்தோம். நமது இஸ்லாமிய உம்மத்துக்கு இவற்றுள் வீழ்ந்துவிடாதிருக்க தொடர்ந்தும் உபதேசித்துக்கொண்டே இருந்தோம். இந்த விவகாரங்களில் முன்னெப்போதுமில்லாத அளவு வெளித்தலையீடுகளையும் நாம் சுட்டிக் காட்டினோம். அதில் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள் சிரியாவின் வீரமைந்தர்களே.
(5) நாம் நமது அரசியல் முன்னெடுப்புக்களை வெளிப்படையோடும் நுணுக்கமாகவும் எச்சரிக்கையுடனும் நலன்களை அடைந்து – தீங்குகளை அப்புறப்படுத்தலையும் இணைத்து செய்துவந்தோம். அதில் நாம் எமது அடிப்படை பண்பாடுகளைத் தொடர்ந்தும் எப்போதும் போல் பேணி வந்தோம். நாம் நமது உம்மத்தின் மையப் பிரச்சினையாக பலஸ்தீனப் பிரச்சினையை நோக்க வேண்டும்; எல்லோருக்குமான அபாயம் இஸ்ரேல் என்பதை மக்களிடம் கொண்டுசெல்லல் என்ற ரீதியில் செயலாற்றினோம்.
அரபு வசந்தத்தை இஸ்லாமியவாதிகள் கையாண்ட விதம் குறித்து:
இப்பகுதி குறித்தும் எவ்வித அழுத்தமும் எனது பார்வைகளை முன்வைக்கிறேன். இஸ்லாமியவாதிகள் ஜனநாயகம் மீது நம்பிக்கைகொண்டுள்ள; பரீட்சித்தும் பார்க்கின்ற நடுநிலையான பாதையில் செல்லக் கூடிய தரப்பினர்கள் ஆவர். அரபுலகில் இஸ்லாமியவாதிகள், இஸ்லாமியவாதிகள் அல்லாதவர்களின் அரசியல் குறித்து நான் நன்கறிந்துள்ளேன். அவர்களில் இஸ்லாமியவதிகளே பல இழப்புக்களை சந்தித்த போதிலும் திறன் மிக்க இயங்குதல் கொண்ட, ஜனநாயகம் குறித்து நன்கு அனுபவமுடையவர்களாவர். அவர்களே தம்மில் திறனோடு ஜனநாயகத்தை பரீட்சித்தவர்கள்; பல தியாகங்களோடும் இழப்புக்களோடும் சில தவறுகள் இழைத்திருந்த போதிலும் அதில் எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள்.
அடுத்து, இங்குள்ள கேள்வி இஸ்லாமியவாதிகள் ஜனானாயகத்துடன் இருக்கிறார்களா! இல்லையா! என்பதல்ல. மாறாக இஸ்லாமியவாதிகள் எவ்வாறு தொடர்ந்தும் ஜனநாயகத்தைப் பற்றிக்கொண்டு, அதன் விளைவுகளை திருப்தியுடன் நோக்கியவர்களாக இருக்கப் போகிறார்கள்? பெரும்பான்மையொன்றைப் பெற்ற போதிலும் எதிரணிகள் புறமிருந்து வரும் எதிர்ப்புக்கள், நம்பிக்கையீனங்கள், அதிருப்திகளுக்கு மத்தியில் எவ்வாறு தொடர்த்ந்திருக்கப் போகிறார்கள் என்பது சவால்மிக்கதாகும். இஸ்லாமியப் பரப்பில் ஒரு பகுதியான நாம் கூட இதனை ஹமாஸில் பிரயோகித்துப் பார்த்திருக்கிறோம். இதனை அடிப்படையில் ஓர் எதிர்ப்பியக்கம் என்பதைப் பேணிய நிலையிலேயே செய்தோம்.
இங்கு இஸ்லாமியவாதிகளோ அல்லது இஸ்லாமியவாதிகள் அல்லாத தேசியவாதிகள், இனத்துவப் பார்வையுடையவர்கள் போன்றோரை நிர்ப்பந்திக்கக் கூடிய பல தூண்டல் காரணிகள் உள்ளன. இங்கு எவரும் ஜனநாயகம் மூலமாக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு கடும் சோதனைகளுக்கு மத்தியில் தமது உள்நாட்டு, பிராந்திய, உலகளாவிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பலவீனங்கள் இலகுவாக வெளிப்பட்டுவிடும். அதிகரித்த விமர்சனங்கள் சிறிய பாதகங்களையும் வேற்படுத்திக் காட்டிவிடும். இங்கு இஸ்லாமியவாதிகள் தம் மீதான ஏனையோரின் விமர்சனங்களை ஏற்க வேண்டும்; ஏனெனில் அவர்கள் தற்போது பொதுவெளிக்கு வந்துவிட்டார்கள். இஸ்லாமியவாதிகள் அல்லாதோருக்கும் அவர்களது விமர்சனங்களை முன்வைக்க கண்ணியமான இடமுண்டு; அவர்கள் அதிலே வரம்புமீறிச் சென்றுவிடவும் கூடாது.
இங்கு அரபு வசந்தத்தை இஸ்லாமியவாதிகள் கையாண்ட விதம் குறித்து நோக்குகையில் இரண்டு தவறுகள் காணப்படுகின்றன:
(1) அரபுக்களின் சமகால நிலை மற்றும் இதன்போது பாதகமளிக்கக் கூடிய சக்திகளைக் கணிப்பதில் மிகைப்படுத்தி நோக்கிவிட்டார்கள். இது குறைந்த அனுபவம், நுணுக்கமான தகவல்கள் இன்மை, அநேக சந்தர்ப்பங்களில் ஏனையோர் விரித்த வளைகளுக்குள் விழுந்திருந்தமை, தமது பலம் குறித்த மிகையான-பிழையான எண்ணவோட்டத்தைக் கொண்டிருந்தமை, தம்முடைய பலம் மிக்க வலைப்பின்னல், மக்கள் பலம், ஆதரவு மட்டம், தாம் பெரும்பான்மையினர் என்ற எண்ணம் போன்றவைகளை இஸ்லாமியவாதிகள் மிகை மதிப்பீட்டுடன் நோக்கினர். இவையே எதிர்ப்புரட்சிகளை அவர்களால் கையாள முடியாது போனமைக்கும் சர்வதேச ஆதரவுகளைப் பெற முடியாமைக்கும் காரணிகளாகும்.
(2) இரண்டாவதாக ஏனைய தரப்பினர்களுடன் உரையாடி பணியாற்றுவதில் அவர்கள் விட்ட தவறுகளாகும்; இஸ்லாமியவாதிகள் பரீட்சார்த்த செயல்பாடுகளில் தங்கியிருந்தனர். பெரும்பான்மையைப் பெற்றிருத்தல் என்பது முக்கியமானது; ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல. அதாவது அரசியல் தீர்மானங்களை எடுக்கும் போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்புக்களுடனும் உரையாடி தனிமைப்பட்டுப் போய்விடாமல் இருக்க வேண்டும்; நோக்கங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் போது பல தரப்பினரும் பங்கேற்பதை எதிர்க்காது இணைத்து செல்ல வேண்டும். இது விடயத்தில் நாம் தவறு விட்டிருக்கிறோம். 2006 இல் அனைத்து தரப்ப்பினரை விடவும் மிகைத்து நாம் வென்ற போது தனித்து ஆட்சி அமைத்தோம். நாம் நமது பலம் குறித்து அதிக மதிப்பீடும், பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கிறோம் என்ற எண்ணமும் நம்மை பல தரப்பினருடன் உடன்பாடின்றி பயணிக்க செய்தது. நாம் அனைத்துத் தரப்புக்களுக்கும் நாம் மட்டும் மாற்றீடு என்ற நிலைப்பாட்டில் இருப்பது தவறானது என்பதைக் கண்டறிந்து கொண்டேன்.
இதனை சுருக்கமாக நான் ஒரு சம்பவத்தினூடாகக் கூறுகிறேன். ஒருமுறை, ஃபத்ஹ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் நம்மை பேச்சுவார்த்தைக்கென சந்திக்க வந்திருந்தார். அப்போது நமது தலைமையகம் சிரியாவில் இருந்தது. ஃபத்ஹ்க்கும் நமக்கும் இடையிலான வேறுபாடு தெரிந்த விடயமே. நாம் அதன்போது அவரிடம் கூறினோம் “யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்! நமது உரிமைகளில் நீங்கள் தவறிவிட்டீர்கள்; உங்களது உரிமைகளில் நாம் தவறிவிட்டோம். நாம் நமது தவறு எதுவெனில், ஃபத்ஹ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டது; இனி நாமே மாற்றீடு என நாம் நினைத்த போது தவறிழைத்தோம். சமூக மட்டத்தில் செயற்படுவதே அதிக வினைத்திறன் தரக் கூடியது என்பதை நாம் அறியவில்லை. நீங்கள் தவறிழைத்தது, பலஸ்தீன களத்தில் புதிய தரப்பாக ஹமாஸ் செயல்பட வருவதை அங்கீகரிக்காத போதாகும்; ஹமாஸ் உண்மையில் செயலாற்றுவதற்கான அனைத்து சக்திகளையும் கொண்டிருக்கிறது. ஹமாஸ் ஒரு புதிய பிரவாகத்துடன் வருகிறது. அது உங்களோடு பங்களித்துப் பயணிக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவைல்லை.”
நாம் பங்கேற்பு என்ற விடயத்தையே முற்படுத்தி செயலாற்ற வேண்டும்; மாற்றீடு என்பதை அல்ல. உண்மையில் நாம் பங்கேற்று உடன்பாட்டுடனும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும் அனைவரும் பங்கேற்றுப் பொறுப்புக்களை சுமந்து பயணிக்கின்ற அமைப்பைக் கொண்ட அரசியல் பண்பாடு கொண்ட நிறுவனங்களை ஒவ்வொரு ஊரிலும்/நாட்டிலும் அமைப்பது நம்முடைய காலக் கட்டாயமாகும்; அதோடு அரசியல் ரீதியிலும் போராட்ட ஒழுங்கிலும் நாம் உடன்பாட்டோடு பயணிக்க வேண்டும்; அதற்கென உடன்பாடாக பயணிக்கக் கூடிய செயற்தளங்களை இனங்கண்டு செயற்படுவதற்கான பொறிமுறைகளையும் உருவாக்கவேண்டும்.
ஒரு முறை பலஸ்தீன செயற்பரப்பில் பணியாற்றுகின்ற ஒருவர் “அரசியல் தீர்மானங்கள் எடுப்பதில் நீங்கள் தனித்து செயற்படுவீர்களா?” எனக் கேட்ட போது, “இல்லை. நீங்களும் கூட அவ்வாறு செயற்படக் கூடாது” என்றேன். அரசியல், போராட்டம், தேசியம் தொடர்பான விவகாரங்களில் முடிவுகள் எடுப்பது இவ்வாறே இருக்கவேண்டும். இவற்றை 2006 இலிருந்து நாம் பேசிய போதும், துரதிர்ஷ்டவசமாக நடைமுறைக்கு வரவில்லை.
மேற்கூறிய நடைமுறைகளை ஹமாஸ் விசுவாசிக்கிறது. மேலும், ஹமாஸ் தன்னை மீள்பரிசீலனை செய்துகொண்டே இருக்கிறது என்பதைக் கூறிக் கொள்கிறோம். அது தவறுகளிலும் வீழ்ந்துள்ளது என்பதை ஏற்கிறோம்.
அது தனது மக்களின் சுபீட்சத்துக்காக, போராட்டத்தின் வெற்றிக்காக அது தொடர்ந்தும் செயற்படுகிறது. முற்றுகையை உடைப்பதற்கு போராடியுள்ளது; முற்றுகைக்குட்பட்ட நிலையில் அது மூன்று போர்களை எதிர்கொண்டது; முற்றுகைக்குட்பட்ட நிலையிலேயே அது பல பரீட்சார்த்த முயற்சிகளை செய்துள்ளது; முற்றுகைக்குட்பட்ட நிலையிலேயே அது தனது ஆயுத திறன்களை விருத்தி செய்திருக்கிறது. பல புதிய கண்டுபிடிப்புக்களையும் செய்துள்ளது; மக்களுடனேயே எப்போதும் நெருக்கமாக இருந்துள்ளது.
மிகக் கடினமான காலப் பிரிவில் இன்திஃபாழா துவங்கிய போதில் அல்அக்ஸா, அல்குத்ஸுக்குள் இருந்து போராடும் ஆண்-பெண் முராபித்கள் மிகக் குறைந்தளவானோரே இருந்தனர். அதன்போதே அரபு-இஸ்லாமிய சமூகங்களின் பொறுப்பான அல்அக்ஸாவைத் துண்டாடும் நடவடிக்கையை அவர்கள் தடுத்திருக்கின்றனர்.
நாம், நம்முடைய தவறுகளை சரிப்படுத்திக் கொள்ள அல்குர்ஆன் கூறும் செயல்திட்டத்தையே பின்பற்றினோம். எமது ரப் அல்குர்ஆனில் உஹத் யுத்த தோல்வியின் போது ஸூரத்து ஆல இம்ரானில் குறிப்பிடுகிறான்:
“இன்னும் உங்களுக்கு ஒரு துன்பம் (உஹதில்) வந்த போது, நீங்கள் அவர்களுக்கு (பத்ரில்) இதுபோன்று இரு மடங்கு துன்பம் உண்டாக்கியிருந்த போதிலும், ‘இது எப்படி வந்தது?’ எனக் கூறுகிறீர்கள். (நபியே!) இது உங்களிடமிருந்து தான் எனக் கூறுவீராக!” (ஆல இம்ரான் :165)
“உங்களிடமிருந்துதான் எனக் கூறுவீராக!” என அவன் குறிப்பிடுகிறான். இது பௌதிக ரீதியான தயார்படுத்தல்கள், காரணிகளை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிடாது. அவற்றுக்கு நமது முயற்சிகளே தேவை.
இறுதியாக… இக்காலப் பிரிவில் நாம் எம்மில் நமது நிலைமைகள் குறித்து மிகச் சரியாக மதிப்பிடுவதற்கான தேவை இருப்பதைக் கண்டோம்; வரக் கூடிய காலப் பகுதிகளில் நம்மை இன்னும் விருத்தியாக்க வேண்டும்; அது சிந்தனா ரீதியான விருத்தி, அரசியல் ரீதியான விருத்தி, வலைப்பின்னல் ரீதியான விருத்தி ஆக இருக்க வேண்டும். இன்னும் மாற்றம், வெற்றி, விருத்து குறித்த எனது ஆவலின்படி கூறுகிறேன். ஏனைய தரப்புக்களின் அனுபவங்களையும் பெற்று வெற்றியை எவ்வாறு தொடர்ந்து தக்கவைப்பது, வழிகளைப் புதுப்பித்து விருத்தி செய்வது குறித்தெல்லாம் சிந்திக்க வேண்டும். ஆனால் சிந்தனாரீதியாக உங்களது அடிப்படையையும் அடையாளத்தையும் இழந்துவிடக் கூடாது. அடுத்து ஹமாஸுக்கு பிராந்திய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்புகள் உள்ளன. ஆனால் நாம் நான்காம் தரப்பொன்றின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து போய்விடுவதில்லை. இன்னொரு தரப்பின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அரசியல் பங்களிப்பை மட்டுமே செய்வது வழியல்ல. உங்களது நிபந்தனையையும் சொல்லுங்கள். இதற்கு நீங்கள் பலமுள்ளவராக இருக்க வேண்டும்; அத்தோடு உங்களது அரசியல் பார்வை எப்போதும் விழித்திருக்க வேண்டும்.
அனைவருக்கும் நன்றிகள்… வஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.
No comments:
Post a Comment