Thursday, May 31, 2018

அல்லாஹ் யாரை நேசிக்கிறான், அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை

ஒவ்வொரு முஸ்லிமின் இறுதி ஆசை தன்னை அல்லாஹ் நேசிக்கவேண்டும், அவனின் உவப்பிற்குறியவானான தான் மாற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும், இருக்கவேண்டும்.

குர்ஆனின் அற்புதத்தைப் பாருங்கள் அல்லாஹ் யாரை #நேசிக்கிறான் என்பதை #பதினாறு16 இடங்களிலும், அல்லாஹ் யாரை #நேசிப்பதில்லை என்பதை #பதினாறு16இடங்களிலும் ஒரே அளவில் சுட்டிக்காட்டுகிறது.

குர்ஆனை ஓதுகிற பொழுது அந்த இடங்களில் சற்று நிதானித்து யாரை அல்லாஹ் நேசிக்கிறான்,யாரை வெறுக்கிறான் என்பதை மனதில் உள் வாங்கி நாம் செயல்பட ஆரம்பித்தால் நிச்சயமாக நாம் அல்லாஹ் வின் நெருக்கமான அடியானாக மாறிவிடலாம்.

#அல்லாஹ்வால்_நேசிக்கப்படுபவர்கள்

1- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்
[البقرة: 195].
2- (إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ)
பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.
[البقرة: 222].
3- (فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ)
நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்
[آل عمران: 76].
4- (وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ)
நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
[آل عمران: 134].
5- (وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ)
அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்
[آل عمران: 146].
6- (وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ)
அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
[آل عمران: 148].
7- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ)
நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்
[آل عمران: 159].
8- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ)
மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்
[المائدة: 13].
9- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ)
நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
[المائدة: 42].
10- (وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ)
நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
[المائدة: 93].
11- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ)
நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
[التوبة: 4].
12- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ)
நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்
[التوبة: 7].
13- (وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ)
அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்
[التوبة: 108].
14- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ)
நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
[الحجرات: 9].
15- (إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ)
நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்
[الممتحنة: 8].
16- (إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُمْ بُنْيَانٌ مَرْصُوصٌ)
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான் ( 4:الصف )

#அல்லாஹ்வால்_நேசிக்கப்படாதவர்கள்

✔ ثانياً: ( مالا يحبه الله ) :

1- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ)
நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
[البقرة: 190].
2- (وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ)
கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
[البقرة: 205].
3- (وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ)
(தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
[البقرة: 276].
4- (فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ)
நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
[آل عمران: 32].
5- (وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ)
அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
[آل عمران: 57].
6- (وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ)
அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை
[آل عمران: 140].
7- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا)
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
[النساء: 36].
8- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا)
கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
[النساء: 107].
9- (وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ)
அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
[المائدة: 64].
10- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ)
நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை
[المائدة: 87].
11- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ)
நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
[الأنفال: 58].

12- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ)
நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
[الحج: 38].
13- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ)
அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்
[القصص: 76].
14- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ)
நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை
[القصص: 77].
15- (إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ)
அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
[لقمان: 18].
16- (وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ)
கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
[الحديد: 23].

நம் அனைவரும் அல்லாஹ் தன்னுடைய நேசத்திற்குறியவர்களில் பட்டியலில் இணைப்பானாக! ஆமீன்.

Saturday, May 19, 2018

நபிமார்கள் கேட்ட (40) துஆக்கள்

நபிமார்கள் கேட்ட (40) துஆக்கள்
-----------------------

  01. துஆக்கள் ஏற்கப்பட 

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 2: 127௧28)

  -----------------------

  02. ஈருலக நன்மை பெற 

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ )

"ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!"

(அல்குர்ஆன் 2: 201)

-----------------------

  03. கல்வி ஞானம் பெற 

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ

( أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِي )

"அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." (அல்குர்ஆன் 2:67)

தொடர்ச்சிக்கு...

http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3845

Saturday, March 10, 2018

திராவிடர் கழகம்’ என்று பெயர் வைத்தது ஏன்?

தங்களது இயக்கத்திற்கு ’திராவிடர் கழகம்’ என்று பெயர் வைத்தது ஏன்? ‘தமிழர் கழகம்’ என்று வைக்கக் கூடாதா?

”திராவிடர் என்பதற்குப் பதிலாக ’தமிழர்கள்’ என்று ஏன் வழங்கக் கூடாது என்று சிலர் கேட்கிறார்கள்.

தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள் தாங்களும் தமிழர்கள்தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள்.

‘நாங்களும் தமிழ் நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்;
தமிழே பேசுகிறோம்; தமிழ்நாட்டிலேயே இருக்கிறோம்.
அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?’ என்று கேட்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழர் என்பது தமிழ் (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும் - இன்று அது மொழிப் பெயராக மாறி விட்டிருப்பதால்,

அம்மொழி பேசும் ‘ஆரியப் பண்பு உடைய’ மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்று உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள்.

அதோடு ஆரியப் பண்பை நம் மீது சுமத்த அந்தச் சேர்க்கையை பயன்படுத்தி விடுகிறார்கள்.

அவர்களும் நாமும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனபதால்தான் நாம் சூத்திரர்களாகிறோம். ஆகவே, நம் கூட்டத்திலிருந்து அவர்களை விலக்கிப் பேசித்தான்,
நம்மை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நம்மில் தமிழன் என்று சொல்லும் ஏமாளிகளைத்தான் பார்ப்பனர்களால் ஏமாற்ற முடியுமேயொழிய – ‘திராவிடர்’ என்றால் அவர்களால் ஏமாற்ற முடியாது.”

பெரியார் – விடுதலை 05.10.1948

குடிஅரசு இதழ் தொகுப்பு

எழுத்தாளர்: பெரியார் திராவிடர் கழகம் பிரிவு:மின்னூல்கள் 
வெளியிடப்பட்டது: 02 ஜூலை 2010

குடிஅரசு இதழ் தொகுப்பு

1983 ஆம் ஆண்டில் தொகுத்து 2003 ஆம் ஆண்டுவரை 20 ஆண்டுகளாக தோழர் வீரமணி அவர்களால் முடக்கிவைக்கப்படிருந்த குடி அரசு இதழ்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 2003 ஆம் ஆண்டில் (1925 குடி அரசு) வெளியிடப்பட்டது. 1925 முதல் 1938 வரையிலான 28 தொகுதிகளை மொத்தமாக 2008 ஆம் ஆண்டு பெரியார் தி.க வெளியிடத் தயாரானபோது பெரியார் சிந்தனைகள் வெளிவராமல் தடுக்க தன்னால் ஆன எல்லாவகையான காரிய்ங்களையும், சட்டரீதியான காரியங்களையும் செய்து பார்த்தார் தோழர் வீரமணி. பொறுமையாகக் காத்திருந்தோம். 

உயர்நீதிமன்றம் தோழர் வீரமணியிடமிருந்து பெரியாரை விடுதலை செய்துள்ளது. நீதிபதி சந்துரு அவர்கள் குடி அரசை பெரியார் தி.க வெளியிட எந்தத் தடையும் இல்லை என தீர்ப்பு கொடுத்தார். அதையும் எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடும் நியாயமில்லை. பெரியார் திராவிடர் கழகம் குடி அரசு தொகுப்புகளை வெளியிட எந்தத் தடையும் இல்லை என இன்று (09.06.2010) மாண்பமை நீதியரசர்கள் இப்ராகிம் கலிஃபுல்லா, கிருபாகரன் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கின்றனர்.

பெரியாரின் சிந்தனைகள் எவருக்கும் தனிப்பட்ட சொத்தல்ல. ஆனால் மீண்டும் தோழர் வீரமணி பெரியாரைத் தன் தனிப்பட்ட சொத்தாக்கி அதன் வழியாக தன் மகனுக்கு சொத்து சேர்த்துக் கொடுக்க எந்த எல்லைக்கும் போவார். எனவே பெரியாரின் கருத்துக் கருவூலங்களை - 2000 ஆவது ஆண்டிலிருந்து 2010 ஆம் வரை 10 ஆண்டுகளாக பெரியார் திராவிடர் கழகம் உழைத்து, தேடித் தேடி அலைந்து தொகுத்து அச்சிட்ட 28 தொகுப்புக்களை இலவசமாக அனைவருக்கும் அனுப்பி வைக்கிறோம். படித்து பாதுகாத்து வையுங்கள். பல இலட்ச ருபாய் பொருள் நட்டம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அச்சிட்ட தொகுப்புகள் விற்பனை ஆகாவிட்டாலும் பரவாயில்லை. பெரியார் கருத்துக்கள் அனைவருக்கும் செல்லவேண்டும். அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பி வைக்கிறோம்.  படியுங்கள் - பரப்புங்கள் - வாழ்வில் கடைபிடியுங்கள்.

குடிஅரசு 1925 தொகுப்பு முன்னுரை
குடிஅரசு 1925 தொகுப்பு

குடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1935 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 2

குடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 1
குடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 2

ரிவோல்ட் ஆங்கில நூல் தொகுப்பு

பெரியார் திராவிடர் கழகம்

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/9820-2010-07-02-06-13-51

Friday, March 9, 2018

தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி

Suriya Moorthy

மாநில சுயாட்சி குறியீட்டு முயற்சி
.
கன்னட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கர்நாடக மாநிலத்திற்கான தனிக்கொடி குறித்து ஆய்வு செய்ய ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தார் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா என்கிற செய்தி தான் 2017 ஆகஸ்ட் 7 அன்று ஊடகங்களின் முக்கிய செய்தி.. மாநில சுயாட்சி குறித்து தேசிய கட்சியின் முதல்வர் ஒருவர் தீவிரமான நடவெடிக்கை எடுக்க துணிந்தது பலருக்கு ஆச்சர்யம் அளித்தது. எதிர்பார்த்தது போலவே ஒன்பது பேர் குழு பிப்ரவரி 6 2018 அன்று முதல்வர் மூலம் அமைச்சரவைக்கு அறிக்கையை சமர்பித்தது, தாமதம் ஏதுமின்றி இரண்டே நாளில் 8ம் தேதி கர்நாடக மாநிலத்திற்கான தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார் சித்தராமைய்யா
.
அறிமுகப்படுத்தியதே  மிகப்பெரிய சாதனை என்பது ஒருபுறமிருந்தாலும், மாநில அரசுக்கு தனிக்கொடியை அறிவிக்க சட்டபூர்வ உரிமை இல்லை என்பதால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே அந்த கொடி சட்டப்படி கர்நாடக மாநிலத்தின் அதிகாரப்பூர்வ கொடியாகும், நாடாளுமன்றமும் குடியரசு தலைவரும் ஒப்புதல் அளிக்கும்வரை அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடையாது. கொடியை அறிமுகப்படுத்திய பின்னர் சித்தராமைய்யா பேசிய வார்த்தைகள் கவனிக்க தகுந்தவை.. இந்த கொடி குறித்த முடிவினை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்து அழுத்தம் கொடுப்போம், கொடிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம் என்று ரத்தின சுருக்கமாய் அவர் சொல்லி நகர்ந்தாலும்.. மெட்ரோ நிலையங்களில் இந்தி எழுத்துக்களுக்கு தார்பூசியதில் தொடங்கி இந்தி எதிர்ப்பு குழு அமைத்தது வரை கன்னடிகர்களிடம் ஏற்பட்டுள்ள இன உணர்வை முன்வைத்து தேர்தலை மையப்படுத்தி பாஜகவிற்கு செக் வைத்துள்ளார் என்பதே அவர் கொடியை அறிமுகப்படுத்திய காலம் உணர்த்தும் செய்தி
.
கர்நாடகாவே தனிக்கொடி அறிவித்து விட்டது, மாநில சுயாட்சியின் வேர் நிலம் தமிழ்நாடு இதுகுறித்து சிந்திக்கவே இல்லையா என்று நினைக்கலாம் ஆனால் சற்றேறக்குறைய ஐந்து சதாப்தங்களுக்கு முன்னரே தமிழ்நாட்டிற்கான தனிக்கொடியை அறிமுகப்படுத்தி இந்திய ஒன்றியத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டார் கலைஞர், அண்ணா மறைவுக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற கொஞ்ச நாளிலேயே அண்ணா கண்ட மாநில சுயாட்சிக்கு வடிவம் கொடுக்க ராஜமன்னார் தலைமையிலான குழு குறித்த அறிவிப்பை 17/03/1969 அன்று டெல்லியில் அமர்ந்துகொண்டு அறிவித்து டெல்லியை நடுங்கவைத்தவர் அல்லவா அவர்.. அவர் செய்யாமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம்
.
இந்திய அரசியலமைப்பு அவையில் (constitutional assembly) இந்திய ஒன்றியத்திற்கான தேசிய கொடி குறித்த விவாதத்திலேயே தனிக்கொடிகள் குறித்த கோரிக்கைகள் எழுந்ததுண்டு, ஜார்கண்ட் பழங்குடியினத்தை சேர்ந்த ஜெயபால் சிங் முண்டா என்பவர், பல்வேறு பழங்குடிகள் அவர்களின் கலாச்சார அடையாளமாக தங்களுக்கேயான பிரத்யேக கொடிகளை பயன்படுத்துகின்றனர் ஆகவே தேசிய கொடியோடு இணைத்து பழங்குடிகள் தங்களின் கொடிகளையும் பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி வழங்க வகை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். விவாத நிலையிலேயே அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, அதற்கு பின்னர் 1947 ஜூன் 22 அன்று இந்திய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பு அவைக்கு தேசிய கொடியினை அறிமுகப்படுத்தினார் நேரு ஆக இந்திய ஒன்றியத்திற்கான ஏக கொடியாக மூவர்ண கொடி மாறியது
.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுமூக தீர்வு எட்டப்பட்டு அரசியலமைப்பு சிறப்பு பிரிவு 370 காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கியது. அதை தொடர்ந்து விவசாயிகளின் பெருமையை குறிக்கும் பொருட்டு கலப்பை படத்தோடு கூடிய தனிக்கொடிக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.. அன்று தொடங்கி இன்று வரை தனிக்கொடி உடைய ஒரே மாநிலம் காஷ்மீர் மட்டும் தான்.. எப்படி பார்த்தாலும் ஜெயபால் சிங் முண்டே கோரிக்கையும் சரி, காஷ்மீர் கொடியும் சரி இரண்டுமே சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்கு பின்னான உருவாக்க காலத்திலும் நடந்து முடிந்துவிட்டன ஆனால் கலைஞர் தனிக்கொடி கேட்ட காலம் அப்படி இயல்பான காலமாக இருக்கவில்லை
.
சுதந்திரம் பெற்று கால்நூற்றாண்டு காலம் நெருங்கிக்கொடிருந்தது, மொழிவாரி மாநில பிரிவினைகள் மேற்கொள்ளப்பட்டு இந்திய ஒன்றியம் ஏறக்குறைய அதன் இன்றைய வடிவத்திற்கு வந்திருந்தது, அரசியல் ஆட்சி கட்சிகள் என்று எல்லாமே ஒரு நிலையான வலுவான இடத்தில் இருந்தன, அப்படிப்பட்ட 70களில் தான் மாநிலக்கொடி என்ற துணிச்சலான கோரிக்கையை வைத்தார் அன்றைய முதல்வர் கலைஞர்
.
அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளது போல பிராந்தியங்களுக்கு தனிக்கொடி வேண்டும், 25 பிராந்தியங்களை உள்ளடக்கிய ஸ்விட்சர்லாந்து எல்லா பிராந்தியங்களுக்கும் தனிக்கொடி வைத்திருக்கிறது, இத்தனைக்கும் அங்கே பிராந்தியங்களுக்கான சராசரி மக்கள் தொகையே 25000 வரை தான் என்று அவர் காரணங்களை அடுக்கி கொடி கேட்டபோது இந்திய ஒன்றியத்தின் பிற பிராந்தியங்கள் சற்று ஆடித்தான் போயின
.
1970 ஆகஸ்ட் 20 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, அமெரிக்கா போன்ற நாடுகளை சுட்டிக்காட்டி இதுகுறித்து மாநில முதல்வர்களிடம் கருத்து கேட்கப்படும் என்று அறிவித்தார்.. ஏக இந்தியா மீது பற்றுள்ள எல்லா தரப்பும் கொந்தளித்தது.. இன்றைய கார்நாடகத்தின் அன்றைய முதல்வர் (மைசூரு மாநிலம்) வீரேந்திர பாட்டில், மத்திய அரசு இந்த கோரிக்கையை உடனடியாக நேரிடையாக நிராகரிக்க வேண்டும் என்று முழங்கினார். ராஜஸ்தானை சேர்ந்த மோகன்லால் சுக்காடியா, ஒரிசாவின் ஆர்.என்.சிங் டியே ஆகியோர் இந்திய ஒற்றுமைக்கு பங்கம் விளைக்கும் நடவடிக்கை என்று எச்சரித்தனர், ஆந்திர எம்.பி தென்னட்டி விஸ்வநாதன் தேசிய கொடியின் ஒரு சிறுபகுதியில் மாநில அரசுகளின் சின்னங்களை அனுமதிக்கலாம் என்ற யோசனையை சொன்னார் இப்படி பெரும் எதிர்ப்பும், சின்ன சின்ன ஆதரவுகளும் (அதுவும் மாற்று யோசனைகளோடு) வந்துகொண்டிருந்த சூழலில் கலைஞரின் இந்த கோரிக்கையை முழுமையாக ஆதரித்தத்தோடு, இது இந்திய தேசியக்கொடியை அவமதிக்கும் செயல் அல்ல என்று உரக்க சொன்னவர் பஞ்சாபின் முன்னால் முதல்வர் குருநாம் சிங். 1969ல் காங்கிரஸ் இன்டிகேட் சின்டிகேட் என்று பிரிந்த நிலையில் ஸ்தாபன காங்கிரஸும், இன்றைய பாஜகவின் அன்றைய வேரான ஜனசங்கமும் இதை மிகக்கடுமையாக எதிர்த்தன
.
எதிர்ப்புகள் தீவிரமடைந்த சூழலில் கொடி விவகாரம் தொடர்பாக 25 ஆகஸ்ட் 1970 அன்று டெல்லியில் இந்திராகாந்தியை சந்தித்தார் கலைஞர், மாநிலத்திற்கான தனிக்கொடிக்கு அனுமதி வழங்க கேட்டுக்கொண்டார், அந்த சந்திப்பின்போது இந்திய தேசிய கொடியும் காங்கிரஸ் கொடியும் ஒன்றாய் இருப்பதால் தனியாக ஒரு கொடியை வடிவமைக்க வேண்டும் என்று முன்பொருமுறை ராஜாஜி சொல்லியதை நினைவுபடுத்தி அந்த அம்மையாருக்கு அதிர்ச்சி கொடுக்கவும் அவர் தவறவில்லை பிறகு என்ன நடந்ததென தெரியவில்லை.. இரண்டு நாட்களுக்கு பிறகு டெல்லியில் 1927 ஆகஸ்ட் 27 அன்று செய்தியாளர்களை சந்தித்தவர் தமிழ்நாட்டிற்கான தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார், மூன்று மாதங்களில் முடிவு சொல்வதாய் சொன்ன இந்திராகாந்தி பின்னர் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று சொன்னபோதும் தொடர்ந்து அந்த கோரிக்கையை வைத்துக்கொண்டே இருந்தார்
.
1974 ஆம் ஆண்டு மாநில முதல்வர்களுக்கான கொடியேற்றும் உரிமையை அவர் பெற்றுத்தர பின்னணியிலிருந்தது 71ல் அவர் வைத்த தனிக்கொடி கோரிக்கை என்பது மறுப்பதற்கில்லை.. 48 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு முயன்றதை இன்று கர்நாடகா முயல்கிறது. வெற்றி பெற வாழ்த்துவோம்

சூரியமூர்த்தி

#history #stateflag

https://m.facebook.com/story.php?story_fbid=2068297513389381&id=100006274564260

பெரியார் vs அமித்ஷா

ஆழி செந்தில் நாதன்

இன்று மின்னம்பலம்.காமில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் பாஜக வெல்லுமா?
திராவிடக் கட்சிகளை ஏன் தோற்கடிக்க முடியவில்லை?

திமுக - அதிமுகவுக்கு மாற்று எனக் கிளம்பிவருகின்ற கட்சிகள் ஏன் அவற்றின் ஜூனியர் பார்ட்னர்களாக மாறிவிடுகின்றன?

50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் வியூகத்துக்கும் பெரியாரின் பார்ப்பனரல்லாதோர் அடையாளத்துக்கும் இடையில் என்ன தொடர்பு?

-  இப்படி பல கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளிக்க முயன்றிருக்கிறேன்.

அமித் ஷாவின் சோஷல் இஞ்சினியரிங் பலருக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் இதில் திராவிடக் கட்சிகள் இதில் பிஎச்டி வாங்கியவை. அமித் ஷா சந்திக்கப்போகும் வாட்டர்லூ தமிழ்நாட்டில்தான் என்று ஏன் நம்மால் உறுதியாகச் சொல்லமுடியும் -  இப்படி பலக் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன்.

ஏன் பெரியாரை இந்துத்துவவாதிகளாலும் திராவிடக் கட்சிகளின் பரம வைரிகளாலும் ஏற்கமுடியாது என்பதற்கான யதார்த்தம் இங்கேதான் நிற்கிறது.

திராவிடக் கட்சிகளின்/பெரியாரின் தாக்கத்தைக் குறைத்துமதிப்பிடும் போக்கு இப்போது அதிகரித்துவருகிறது. உண்மையிலேயே திராவிடக் கட்சிகளைத் தாண்டி. அவற்றைவிட சிறந்த அரசியலை முன்னெடுப்போம் என்று முயற்சி செய்பவர்கள்கூட நம்கால வரலாற்றையை சரியாக புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

யதார்த்தத்தில் நின்று நான் எழுதியக் கட்டுரை. படியுங்கள்.

https://minnambalam.com/k/2018/03/09/41

https://m.facebook.com/story.php?story_fbid=10157155077864046&id=612219045