தங்களது இயக்கத்திற்கு ’திராவிடர் கழகம்’ என்று பெயர் வைத்தது ஏன்? ‘தமிழர் கழகம்’ என்று வைக்கக் கூடாதா?
”திராவிடர் என்பதற்குப் பதிலாக ’தமிழர்கள்’ என்று ஏன் வழங்கக் கூடாது என்று சிலர் கேட்கிறார்கள்.
தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள் தாங்களும் தமிழர்கள்தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள்.
‘நாங்களும் தமிழ் நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்;
தமிழே பேசுகிறோம்; தமிழ்நாட்டிலேயே இருக்கிறோம்.
அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?’ என்று கேட்கிறார்கள்.
ஒரு காலத்தில் தமிழர் என்பது தமிழ் (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும் - இன்று அது மொழிப் பெயராக மாறி விட்டிருப்பதால்,
அம்மொழி பேசும் ‘ஆரியப் பண்பு உடைய’ மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்று உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள்.
அதோடு ஆரியப் பண்பை நம் மீது சுமத்த அந்தச் சேர்க்கையை பயன்படுத்தி விடுகிறார்கள்.
அவர்களும் நாமும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனபதால்தான் நாம் சூத்திரர்களாகிறோம். ஆகவே, நம் கூட்டத்திலிருந்து அவர்களை விலக்கிப் பேசித்தான்,
நம்மை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
நம்மில் தமிழன் என்று சொல்லும் ஏமாளிகளைத்தான் பார்ப்பனர்களால் ஏமாற்ற முடியுமேயொழிய – ‘திராவிடர்’ என்றால் அவர்களால் ஏமாற்ற முடியாது.”
பெரியார் – விடுதலை 05.10.1948
No comments:
Post a Comment