ஆழி செந்தில் நாதன்
இன்று மின்னம்பலம்.காமில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் பாஜக வெல்லுமா?
திராவிடக் கட்சிகளை ஏன் தோற்கடிக்க முடியவில்லை?
திமுக - அதிமுகவுக்கு மாற்று எனக் கிளம்பிவருகின்ற கட்சிகள் ஏன் அவற்றின் ஜூனியர் பார்ட்னர்களாக மாறிவிடுகின்றன?
50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் வியூகத்துக்கும் பெரியாரின் பார்ப்பனரல்லாதோர் அடையாளத்துக்கும் இடையில் என்ன தொடர்பு?
- இப்படி பல கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளிக்க முயன்றிருக்கிறேன்.
அமித் ஷாவின் சோஷல் இஞ்சினியரிங் பலருக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் இதில் திராவிடக் கட்சிகள் இதில் பிஎச்டி வாங்கியவை. அமித் ஷா சந்திக்கப்போகும் வாட்டர்லூ தமிழ்நாட்டில்தான் என்று ஏன் நம்மால் உறுதியாகச் சொல்லமுடியும் - இப்படி பலக் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன்.
ஏன் பெரியாரை இந்துத்துவவாதிகளாலும் திராவிடக் கட்சிகளின் பரம வைரிகளாலும் ஏற்கமுடியாது என்பதற்கான யதார்த்தம் இங்கேதான் நிற்கிறது.
திராவிடக் கட்சிகளின்/பெரியாரின் தாக்கத்தைக் குறைத்துமதிப்பிடும் போக்கு இப்போது அதிகரித்துவருகிறது. உண்மையிலேயே திராவிடக் கட்சிகளைத் தாண்டி. அவற்றைவிட சிறந்த அரசியலை முன்னெடுப்போம் என்று முயற்சி செய்பவர்கள்கூட நம்கால வரலாற்றையை சரியாக புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
யதார்த்தத்தில் நின்று நான் எழுதியக் கட்டுரை. படியுங்கள்.
https://minnambalam.com/k/2018/03/09/41
https://m.facebook.com/story.php?story_fbid=10157155077864046&id=612219045
No comments:
Post a Comment