முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகையில் கேட்ட துஆ...
நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும்
இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்.
வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே!
உனக்கே புகழ் அனைத்தும்.
வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது.
உனக்கே புகழ் அனைத்தும்.
வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே!
உனக்கே புகழ் அனைத்தும்.
வானங்கள் பூமிக்கு அரசன் நீயே!
உனக்கே புகழ் அனைத்தும்.
நீ உண்மையாளன்.
உன் வாக்குறுதி உண்மை.
உன்னுடைய சந்திப்பு உண்மை.
உன்னுடைய கூற்று உண்மை.
சொர்க்கம் உண்மை.
நரகம் உண்மை.
நபிமார்கள் உண்மையாளர்கள்.
முஹம்மது உண்மையாளர்.
மறுமை நாள் உண்மை.
இறைவா!
உனக்கே கட்டுப்பட்டேன்.
உன்னையே நம்பினேன்.
உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன்.
உன்னிடமே திரும்புகிறேன்.
உன்னிடமே நீதி கேட்பேன்.
எனவே
நான் முந்திச் செய்த,
பிந்திச் செய்கின்ற,
இரகசியமாகச் செய்த,
பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு.
நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன்.
உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை.
உன்னுடைய உதவியின்றி
நன்மை செய்யும் ஆற்றலோ
தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை
என்று கூறிவார்கள்.
(புகாரி:1120. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்)
Sunday, April 21, 2019
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகையில் கேட்ட துஆ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment